Published on: ஜூன் 23, 2025

மாலைதீவு ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்கு கல்வி சார் விஜயம்

மாலைதீவு ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு கல்வி சார் விஜயம் மேற்கொண்டனர். அவர்கள் ஜூன் 27 வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள்.

அவர்களின் இந்த கல்வி சார் விஜயத்தின் சிறப்புக் கவனம் செலுத்தும் பகுதிகளில், ஆவணக் காப்பகங்கள் மற்றும் பதிவேடுகளைப் பேணுதல் மற்றும் பாதுகாப்பு, களஞ்சிய முகாமைத்துவம், இன்வென்டரி நிர்வாகம் மற்றும் கையிருப்புப் பாதுகாப்பு ஆகியவை அடங்கும்.

இந்த விஜயத்தின் போது அவர்கள், தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களம், இலங்கை சுங்கம், திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகம், இலங்கைப் பாராளுமன்றம் ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளனர்.

மாலைதீவு ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் 08 பேர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதுடன், அவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகேயுடன் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி செயலக அதிகாரிகள் குழுவும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.