Published on: அக்டோபர் 29, 2022

சமூக சமையலறை திட்டத்துடன் ஜனாதிபதி ஊடகப் பிரிவும் இணைந்துகொண்டது

உணவு கிடைப்பதில் சிரமத்திற்கு உள்ளாகும் இந்நாட்டு பிரஜைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “சமூக சமையலறை” திட்டத்துடன் ஜனாதிபதி ஊடகப் பிரிவும் இணைந்து கொண்டது.

ராஜகிரிய சனசமூக சேவை நிலையத்தில் நடத்தப்பட்டு வருகின்ற சமூக சமையலறை வேலைத்திட்டத்துடன், நேற்று (28) ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஊழியர்கள் இணைந்து சமைத்த மதிய உணவை விநியோகித்ததுடன், 400 பேருக்கும் மேற்பட்டோர் சமூக சமையலறையிலிருந்து மதிய உணவை பெற்றுக் கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் நலன்புரிச் சங்கம் இதற்கான நிதி வசதிகளை வழங்கியதுடன், சமூக சமையலறைக் கருத்தை அரச மற்றும் தனியார் நிறுவன மட்டத்தில் பரப்புவதே இதன் நோக்கமாகும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கருத்தின்படி உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிப்படுத்துவதற்காக கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டுவதற்காக பல் துறை கூட்டுப் பொறிமுறை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சமூக சமையலறைத் திட்டம் தொடர்பில் சமூகத்தில் பரந்த கருத்துப் பரிமாற்றம் ஏற்பட்டது.

சமூக சமையலறை கருத்தின் நோக்கம் வரவிருக்கும் உணவு நெருக்கடிக்கு தயார்படுத்துவதும், ஒரு குழுவாக சத்தான உணவை தயார் செய்வதும், உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுபவர்களுக்கு ஆதரவளிப்பதும் ஆகும்.

இந்நிகழ்வில், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சுதீர நிலங்க விதான, ஆசிரியர் பீடப் பணிப்பாளர் பியசேன திஸாநாயக்க, புகைப்படப் பணிப்பாளர் மீஷா குணவர்தன, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் நலன்புரி மற்றும் விளையாட்டு சங்கத்தின் தலைவி, பிரதிப் பணிப்பாளர் தீப்தி பிரமிதா உள்ளிட்ட அதிகாரிகளும் பணிக்குழாமினரும் கலந்துகொண்டனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.